By: தாமல் கோ. சரவணன்
தமிழில்
தோன்றிய முதன்மைக் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், கதை தழுவிய முதல் இலக்கியம், தமிழ் இலக்கிய வரலாற்றில் பல புதுமைகளையும் புரட்சிகளையும்
தோற்றுவித்த காப்பியம். தன் காலத்துக்கு அடுத்து தோன்றிய பக்தி இலக்கியத்திற்கும்
பின்பு தோன்றிய சிற்றிலக்கியத்திற்கும் வித்திட்ட காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும்.
இக்காப்பியத்தில் வருகின்ற
பாத்திரங்களை ஆய்வு செய்து, படமாகப் பிடித்து ஒரு புதிய ஆய்வு நோக்கினை நூலாசிரியர் தாமல் கோ.சரவணன் நமக்கெல்லாம்
படையளாக்குகின்றார். இந்நூல் சிலப்பதிகாரத்தை அணுகுவதற்கும்,
விளக்கமாகப் புரிந்து கொள்வதற்கும் வழித்துணையாக அமையும்
என்பது திண்ணம். சிலப்பதிகாரத்தில் வரும் கதாபாத்திரங்களை,
காப்பிய கதாபாத்திரங்கள், புறக் கதாபாத்தியங்கள், அஃறிணைப் பாத்திரம் என மூன்று நிலையில் 154
கதாபாத்திரங்களை அவர் விளக்கியிருக்கும் பாங்கு அவரின்
நுண்மான் நுழைபுலம் மிக்க அறிவை நமக்குக் காட்டுகின்றது. சிவாலயத்தின் செம்பதிப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது.
By: தி.சுப்ரமணிய தேசிகர்
By: மொழிபெயர்ப்பும், உரையும் : திருவாசகமணி கே.எம்.பாலசுப்பிரமணியம்
By: Translation: Thiruvachakamani K.M. BALASUBRAMANIAM
By: முனைவர் சண்முக. செல்வகணபதி